ஈரோடு : பாஜக ஆட்சிக்கு வந்தால், இலங்கை தமிழர் பிரச்சனை தீரும் என பாஜகவின் மாநில துணைத் தலைவர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.
மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள ஈரோடு வந்த பாஜகவின் மாநில துணைத் தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் பேசும் போது, '' இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கவும், அவர்கள் அந்தஸ்தோடு வாழவும், 13வது சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றவும், பாஜக ஆட்சிக்கு வந்தால் முயற்சிகளை மேற்கொள்ளும். இலங்கை தமிழர்களும் பாஜக ஆட்சிக்கு வந்தால், அவர்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்புகிறார்கள்'' என்று தெரிவித்தார்.
மேலும் பேசும் போது, காங்கிரஸ் ஆட்சியில், அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக ஏறியதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஹெச். ராஜா கூறினார்.
0 comments:
Post a Comment