Wednesday, September 18, 2013

பெட்ரோல் குண்டு வீசியதாக விசுவ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது


கோவையில் விநாயகர் சிலை வைத்ததில் ஏற்பட்ட முன்விரோதத்தில் சிவசேனா நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக விசுவ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

(காவல்துறைக்கு நன்றி அதிவிரைவில் குற்றவாளிகளை கைது செய்ததற்கு. 
கைது செய்யவில்லை என்றால் இதுவும் முஸ்லிம்கள் செய்தது என்று கூறி பந்த் நடத்தி கலவரத்தை உருவாக்கி மாமான் மச்சான் மாதிரி முஸ்லிம்களும், இந்துக்களும் வாழும் அமைதியான தமிழகத்தில் குஜராத், உத்திரபிரதேசம் நடத்திய வன்முறை நடத்தி முஸ்லிம்களை கொன்று குவித்திருப்பார்கள்.)

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

சிவசேனா நிர்வாகி

கோவை பாப்பநாயக்கன்பாளையம் சிறுகாளி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 35). இவர் சிவசேனா கட்சியின் கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவருடைய சகோதரர் வினோத்குமார் (32), சிவசேனாவில் நிர்வாகியாக உள்ளார். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் இரவில் முத்துக்குமார் தனது மனைவி தீபா, மகள் தனுஷ்மா, தாயார் வேலுமணி ஆகியோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். வினோத்குமார் வெளியில் சென்றிருந்தார்.

பெட்ரோல் குண்டு வீச்சு

இந்த நிலையில், நள்ளிரவு 2½ மணிக்கு ஒரு கும்பல் முத்துக்குமார் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியது. வீட்டின் மேல்பகுதியில் உள்ள சிமிண்ட் ஷீட் மீது விழுந்த பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. இதனால் வீட்டின் வெளியே காயப் போட்டு இருந்த துணிகளில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

சத்தம் கேட்டு முத்துக்குமார் வெளியே ஓடி வந்தார். அங்கு துணிகள் எரிந்து கொண்டு இருப்பதை பார்த்துதிடுக்கிட்டார். அதை தண்ணீர் ஊற்றி அணைத்தார். அவரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டு இருந்த கும்பல் தப்பி ஓடியது.

போலீஸ் விசாரணை

இது குறித்து முத்துக்குமார் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் துணை கமிஷனர் பிரவேஷ்குமார், உதவி கமிஷனர் முத்தரசு, இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை சோதனை செய்து, அங்கு சிதறி கிடந்த கண்ணாடி துண்டுகளை சேகரித்தனர். பின்பு அங்கு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இதில், விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விசுவ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் முத்துக்குமார் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்தது.

8 பேர் கைது

இதைத்தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், சந்திரமோகன், சப்–இன்ஸ்பெக்டர்கள் குப்புராஜ், சாமிநாதன், ஆனந்தஜோதி, மலர்விழி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் விசுவ இந்து பரிஷத் மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுபாஷ் (38) மற்றும் நிர்வாகிகள் குண்டு மணி என்கிற மணிகண்டன் (26), ராமகிருஷ்ணன் (22), அனிஷ்குமார் (29), முருகேசன் (32), சுரேஷ் கிருஷ்ணன் (22), கார்த்திக் (25), ராஜ்குமார் (26) மற்றும் விக்னேஷ் (29) ஆகிய 9 பேர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.

அதன்பேரில் அவர்கள் மீது கூட்டுசதி, வெடிபொருட்களை பயன்படுத்துதல் உள்பட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அதில், முருகேசனை தவிர 8 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவை மாஜிஸ்திரேட்டு 3–வது கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முருகேசனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:–

விநாயகர் சிலை

கோவை மாநகர பகுதியில் வினாயகர் சதுர்த்தியையொட்டி புதிதாக விநாயகர் சிலை வைக்க இந்து அமைப்புகள் சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. இதற்கிடையே கடந்த ஆண்டில் வெரைட்டிஹால் ரோடு பகுதியில் வைத்திருந்த விநாயகர் சிலையை இந்த ஆண்டில் பாப்பநாயக்கன்பாளையத்தில் மாற்றி வைக்க சிவசேனா சார்பில் அனுமதி கேட்டனர். அதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

மேலும் சிவசேனா நிர்வாகியான முத்துக்குமார், கட்சியில் சேர்ந்து சிறிது நாட்களுக்குள் அந்த பகுதியில் விநாயகர் சிலையை வைத்துவிட்டதால் அவர் மீது விசுவ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு கோபம் ஏற்பட்டு உள்ளது. அத்துடன் முத்துக்குமாரின் தம்பி வினோத்குமார் நேற்று முன்தினம் மற்ற அமைப்பு நிர்வாகிகளை திட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஆட்டோ பறிமுதல்

இதனால் ஆத்திரமடைந்த விசுவ இந்து பரிஷத்தை சேர்ந்தவர்கள் சுபாஷ் தலைமையில் ஒன்று சேர்ந்து, நள்ளிரவில் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் முத்துக்குமார் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அவர் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர். அவர்கள் சென்ற ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

காவல்துறைக்கு நன்றி அதிவிரைவில் குற்றவாளிகளை கைது செய்ததற்கு.
கைது செய்யவில்லை என்றால் இதுவும் முஸ்லிம்கள் செய்தது என்று கூறி பந்த் நடத்தி கலவரத்தை உருவாக்கி மாமான் மச்சான் மாதிரி முஸ்லிம்களும், இந்துக்களும் வாழும் அமைதியான தமிழகத்தில் குஜராத், உத்திரபிரதேசம் நடத்திய வன்முறை நடத்தி முஸ்லிம்களை கொன்று குவித்திருப்பார்கள்.

1 comments:

சலாம்,

நல்ல தகவல்

என் தளத்தில் இன்று : ஊதா கலரு ரிப்பன்
tvpmuslim.blogspot.com

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More