Tuesday, April 24, 2012

பிரான்ஸ் அதிபர் தேர்தல்- காரைக்காலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு Read more about பிரான்ஸ் அதிபர் தேர்தல்- காரைக்காலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு


பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பிரான்ஸின் காலனிப்பகுதியாக இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த புதுவை மாநிலத்தில் உள்ள பிரெஞ்ச் குடியுரிமைவாசிகளும் வாக்களித்து வருகின்றனர்.
பிரான்ஸ் அதிபர் தேர்தலில், பிரெஞ்சு வாக்குரிமை பெற்ற காரைக்கால் பகுதி மக்கள் ஆர்வத்துடன் வாக்குப் பதிவு செய்து வருகின்றனர். இன்று காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துவருகின்றனர். காரைக்காலில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் மட்டும்  441 வாக்குகள் உள்ளன .
காலை முதலே வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது


0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More