Thursday, September 15, 2011

பல் நலனைக் காத்துக் கொள்ள


பல் நலனைக் காத்துக் கொள்ள

பற்களை சரியாக துலக்குவது எப்படி என்பதை பல் மருத்துவரிடம் தயக்கமின்றி கேட்டுத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள். பற்களை துலக்கி முடித்த பிறகுஈறுகளை சுட்டு விரலால் மெதுவாக மூன்று நிமிஷம் "மசாஜ்செய்யுங்கள். இது சீரான ரத்த ஓட்டத்துக்கு வழி வகுக்கும்.
 
மற்றவர்களை எளிதில் கவருவதற்கு நம் சிரிப்பு முக்கியப் பங்காற்றுகிறது. இதற்கு பற்கள் வரிசையாகவும் அழகாகவும் இருப்பது அவசியம். எனவே தினமும் காலைஇரவு என இரண்டு வேளை பல் துலக்கத் தவறாதீர்கள்.  ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்தவுடன் வாயை நன்றாகக் கொப்பளிப்பது நல்லது. இதனால் பற்களில் உணவுப் பொருள்கள் தேங்காமல் இருக்கும். குளிர் பானங்கள்இனிப்புகளை அதிகம் சாப்பிடாதீர்கள். பல் சொத்தைக்கு வழி வகுக்கும்.
 
ஆறு மாதத்துக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று பல் நலனைக் காத்துக் கொள்ளுங்கள்.

ஞானப் பற்கள் முளைப்பதில் பிரச்னையா   
ஒருவருக்கு கடைசியாக முளைக்கும் நான்கு கடைவாய்ப் பற்கள்தான் ஞானப் பற்கள் ("விஸ்டம் டீத்').இந்தப் பற்கள் சில சமயங்களில் ஈறுகளைக் கிழித்துக் கொண்டு வளர முடியாமல் போய்விடும். மற்ற பற்களினால் ஏற்பட்ட இட நெருக்கடியாலும் இப்பற்கள் வெளி வர முடியாத நிலை ஏற்படலாம். சில சமயங்களில் இந்தப் பற்கள் நேராக முளைக்காமல் திசை மாறி முளைக்கவும் கூடும். அறிகுறிகள் என்னஇவ்வாறு ஞானப் பற்களால் பிரச்னை ஏற்படும்போதுஈறுகளில் வலி மற்றும் வீக்கம்,விறைப்புத் தன்மைதாடைகளில் வீக்கம்தாடைகளில் வலிவாய்ப் பகுதியில் துர்நாற்றம்தலைவலி,ஏதாவது சாப்பிடும்போது வீக்கமான பகுதியில் விரும்பத்தகாத சுவை ஏற்படுதல் ஆகியவை அறிகுறிகளாகும். விளைவு என்னபொதுவாக இத்தகைய பிரச்னைகள் எதுவுமின்றி ஞானப் பற்கள் வளர வேண்டும். ஆனால் இந்தப் பிரச்னைகள் இருக்குமானால் தொற்று அதிகமாகிமுகம் வீங்கி வாய் திறக்க முடியாமல் போய் சிரமப்பட வேண்டியிருக்கும். இதற்கு அறுவைச் சிகிச்சை தேவை. சிகிச்சை என்னஞானப்பல் முளைக்கும் பகுதியில் மட்டும் மயக்க மருந்து செலுத்தி பற்களை அகற்றி விடுதல் நல்லது. சில நேரங்களில் தாடைகளில் ஈறுப் பகுதியைக் கீறி விட்டுஅந்தப் பற்கள் வெளி வருவதற்கு வழி ஏற்படுத்தலாம்.
பல் பிடுங்கப்பட்ட பகுதியில் ரத்தம் வெளியேறலாம். அதனால் வாயை நன்கு கொப்பளித்துத் துப்ப வேண்டும். கைகளால் அந்தப் பகுதியைத் தொடக்கூடாது.
 டாக்டர் கொடுக்கும் மருந்துகளை தவறாமல் சாப்பிட வேண்டும். வலிரத்தம் வெளியேறுதல் அதிகமாக இருந்தால் ஐஸ் கட்டியை அந்த இடத்தில் வைக்க நிவாரணம் கிடைக்கும்.

பல் பாதுகாப்புகள்
உணவை நன்றாக மென்று சாப்பிடவேண்டும். மொத்த மக்கள் தொகையில்எப்போதும்20சதவீதத்தினர் வாயில் புண் ஏற்பட்டுஉணவை சுவைக்க முடியாமல்அவதிப்படுகின்றனர். பெண்கள் பருவவயதை எட்டும் போது இந்த பாதிப்பைஉணர்கின்றனர். சிலருக்குவாழ்நாள்முழுவதும் இது தொடர்கதையாகிவிடுகிறது.
சில குடும்பங்களில்இந்த பாதிப்பு பாரம்பரியமாக தொடர்கிறது. திடீரென விட்டுவிட்டு புண் வரும். 10மி.மீ.,அளவு வரைமூன்று புண்கள் ஏற்படுவது வாடிக்கை. வாயில்,"மியூகோசாஎன்ற கொழகொழப்புசுரப்பிக்கு மிக நெருக்கமாக நரம்புகள்செல்வதால்வாயில் புண் ஏற்படும்போது வலி அதிகமாக தெரிகிறது.இரண்டுமூன்று வாரங்களில் இந்தபுண்கள் தானாகவே ஆறிவிடுகின்றன.வடுக்களும் ஏற்படாது. வாயில் புண்ஏற்பட ஒரே காரணம் கிடையாது.படபடப்பு,ஆன்ட்டிபயாடிக்சாப்பிடுவதுஹார்மோன் மாற்றங்கள்,பலவீனம் ஆகியவை காரணமாகஇருக்கலாம். ஹெர்ப்ஸ் வைரஸ்காக்சாக்கிசைட்டோமெகாலோ வைரஸ்ஹெப்பாடைட்டிஸ் சி ஆகியவையால்வாயில் அடிக்கடி புண் ஏற்படும்.ஹெர்ப்ஸ் வைரஸ்வாயில் நிறையபுண்களை ஏற்படுத் தும்.குழந்தைகளிடையே இந்த பாதிப்புஅதிகம் தெரியும். பெரியவர்களிடையேநீரிழிவு நோயாளிகள்கேன்சர்நோயாளிகள்எச்.ஐ.வி.தொற்றுஉடையோர்நோய் எதிர்ப்பு திகுறைந்தோருக்கு இது போன்றுஏற்படலாம். "அøலோவிர்மருந்துஉட்கொண்டால் இது சரியாகும்.
சிலருக்குவாயின் வெளியில்உதட்டருகேகொத்து கொத்தாக நீர் கொப்புளங்கள் ஏற்படும்.குழந்தைகளுக்கு ஜுரம் ஏற்படும் போதுஇது தோன்றலாம். சில நேரங்களில் வாய் முழுவதும்சிவந்துகன்னத்தின் உள் பக்கத் தில்தயிர் போன்ற திட்டுக்கள் தோன் றும். இது தொற்றால் ஏற்படுகிறது. குழந்தைகளின் பால் பாட்டிலைதினமும் சுத்தமாக கழுவி பால்கொடுத்தாலும்இது போன்று புண்ஏற்படும். வெறும் "நிப்பிளைகுழந்தைவாயில் வைக்கும் பழக்கம் இருந்தாலும்புண் ஏற்படும். இது போன்ற பாதிப்பு உள்ள குழந்தைகள்உணவை விழுங்க சிரமப்படும். சாப்பிட மறுக்கும். கட்டுப்படுத்தாத நீரிழிவு நோய்தொடர்ந்து ஆன்ட்டிபயாடிக் மருந்துசாப்பிடுதல்புற்றுநோய்க்கான சிகிச்சைஎடுத்து கொள்பவர்கள் ஆகியோருக்குவாயில் இது போன்று புண் ஏற்படும்.எச்.ஐ.வி.தொற்று உள்ளவர்களுக்கு,இந்த புண்ணை ஒரு அறிகுறியாகஎடுத்து கொள்ளலாம்.
"
மியூகோசாதொடர்ந்து பாதிக்கப்பட்டால் தான் இது போன்றுபுண்கள் ஏற்படுகின்றன. வாயில்பற்கள் தாறுமாறாகவளர்ந்துள்ளவர்களுக்கு இது போன்றுபாதிப்புகள் அதிகம் ஏற்படும். பல் மற்றும் ஈறை சுத்தமாக வைத்துகொள்ளாதவர்களும்பல் காரைபடிந்துள்ளவர்களும் இந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
தினமும் இரண்டு வேளை பல் சுத்தம்செய்ய வேண்டும். பல் காரைபடிந்துவிட்டால்எவ்வளவு "பிரஷ்'செய்தாலும் அது போகாது.காரைகளுக்கும்பல்லுக்கும் இடையேஉள்ள இடுக்குகளில் பாக்டீரியாக்கள்வாசம் செய்ய துவங்கிபல்லில்அடிக்கடி புண் ஏற்பட்டு வாய்துர்நாற்றம் உருவாகும்.
சிக்கன் 65, காலிபிளவர் 65 போன்றஉணவுகளில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமளிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தரமற்றதாக இருந்தால்வாயில்ஒவ்வாமையை உருவாக்கி, "மியூகோசா'வை பதம் பார்த்து புண்ஏற்படுத்தி விடும்.புகையிலை சுவைத்தல்புகைபிடித்தல்பான்,குட்காபான் பராக்சுவைத்தல் ஆகியவை வாயின் மேற்பரப்பில் உள்ள திசுக்களை அழிக்கின்றன. இதனால் வாய்க்கு நிறம் கொடுக்கும் நிறமிகள் அழித்துவெள்ளை படைஉருவாகும். இது,புற்றுநோயின்ஆரம்ப அறிகுறியாக கருதப்படுகிறது."பயாப்சிபரிசோதனை செய்து சிகிச்சைபெற வேண்டும்."அல்சரேட்டிவ் காலிடிஸ்என்றவகை வாய்ப்புண்நோய் எதிர்ப்புதியை குறைத்து,தீவிரவாய்ப்புண்ணை ஏற்படுத்தும்.
இரும்புச் சத்துதுத்தநாகச் சத்துவைட்டமின் பி குரூப் வகைகள் ஆகியவற்றின் குறைபாடு,வாயில்சிவப்பு திட்டுக்களை உருவாக்கிநாக்கில் அதிக வழவழப்பை ஏற்படுத்திஉதட்டை வீங்க செய்து விடும்.
"
மியூகோசாமிகவும் மெலிந்து விடும்.இதனால் புண் அதிகரிக்கும். 


வாயில் புண் ஏற்பட்டால்

*
உணவு சாப்பிடுவதற்கு முன் ஐஸ்கட்டியை சுவைத்தால் வலி ஏற்படாது.
*
வலியை குறைக்கும் வாய் களிம்புகளை பயன்படுத்தலாம்.
டாக்டர் பரிந்துரைத்தால் வாயில்ஸ்டிராய்டு பூசலாம். ஆனால்தொற்றுஉள்ள வாயில் இது புண்ணைஅதிகரித்து விடும்.
*"
அசைக்லோவிர்மாத்திரையைடாக்டர் ஆலோசனையின் பேரில் சாப்பிட்டால் புண்ணின் தீவிரம் குறையும்.எந்த புண்ணுமே இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால், "பயாப்சிபரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

 
புண் ஏற்படாமல் தடுக்க

*
தினமும் இரண்டு வேளை"பிரஷ்செய்ய வேண்டும்.
தினமும்காலை வெறும்வயிற்றில் 60 மி.லி.அளவு தயிர்சாப்பிடுங்கள். நோய் எதிர்ப்பு திறன்குறைந்து போய் வாயில் புண்ஏற்படுபவர்கள்இது போன்று தயிர் சாப்பிட்டால் புண் ஏற்படுவதை தடுக்கலாம்.
*
வைட்டமின்தாதுப்பொருட்கள் அடங்கிய உணவு வகைகள்பச்சைகாய்கறிகள்பழங்கள்,முளைகட்டிய பயிறு கலவைகள் சாப்பிட்டால் வாயில் புண் ஏற்படாது.
குறிப்பிட்ட வைட்டமின் சத்துகுறைபாடு உங்களுக்குஏற்பட்டுள்ளதென தெரிந்தால்அதற்கான வைட்டமின் மாத்திரை சாப்பிடலாம்.
* "
குளோரெக்சிடைன்போவிடோன் அயோடின் மற்றும் சிலஆன்ட்டிசெப்டிக் "மவுத்வாஷ்'களைபயன்படுத்திவாயை சுத்தம்செய்யலாம்.
நிறமூட்டிகள் கொண்ட உணவு வகைகள் உண்பதை தவிர்க்கவும்.
குழந்தைகளுக்கு பீடிங்பாட்டில்நிப்பிள் ஆகியவற்றைஅடிக்கடி பயன்படுத்தாதீர்கள். படபடப்பு குறைந்தாலே வாயில்புண் மறைந்து விடும். தினமும் 40நிமிட உடற்பயிற்சி

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More