Monday, August 15, 2011

இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான்/ கறிக்கோழி தெரியுமா ?



438.ஜம்ஜம்-நீரூற்றுஇது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான்
மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் 3:97 கூறுகிறது. தெளிவான் அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையில் மக்கள் கண்டு களிக்கும் வகையிலும் எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும் இருக்க வேண்டும். மனிதன் இன்னும் கண்டறியாத சான்றுகள் பல இருக்கலாம். மனிதன் கண்டறிந்த சான்றுகளில் முதன்மையானது ஜம்ஜம் எனும் கிணறாகும்.
இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும் மகன் இptஸ்மாயீலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார். குழந்தை இஸ்மாயீல் தண்ணீரின்றி தத்தளித்த போது வானவர் ஜிப்ரீல் வந்து அந்த இடத்தில் அடித்து ஒரு நீருற்றை ஏற்படுத்தினார், அது தான் ஜம்ஜம் எனும் கிணறாகும்.
இந்தக் கிணறு மாபெரும் அற்புதமாக இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நிரூபிக்கும் சான்றாக இருக்கிறது.

கிணற்றின் அளவு
இந்தக் கிணறு 18 அடி அகலமும் 14 அடி நீளமும் கொண்டதாகும்.
இந்தக் கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் ஐந்து அடியாகும்.
இந்தக் கிணற்றில் இருந்து ஒவ்வொரு விநாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.
குறைந்த ஆளம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில் அமந்துள்ள இந்தக் கிணறு, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும்.
எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.
எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருதுகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருதுகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.
மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது.
பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை. இதை அனுபவத்தில் உணரலாம். மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது. அங்கே அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம் நடக்கிறது என்றெல்லாம் பலவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது போல் இதையும் கருதக் கூடாது. மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை. நிருபிக்கப்டாமல் குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் தினசரி 20 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள் நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் இது மெய்யான அற்புதமாகும். இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

இனியாவது மக்களின் நலன் கருதி கறிக்கோழி வளர்ப்பை முறைப்படுத்தவேண்டும்.

கறிக்கோழிகளை வேகமாக வளர வைப்பதற்காக உணவுடன் வேதிப் பொருள்கள் கலந்து வழங்கப்படுவதால்அதை சாப்பிடுகிறவர்கள் நோயில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் உணவுத்தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. அண்மைக்காலமாக அசைவு உணவுகளின் தேவை அதிகரித்து வருகிறது. இன்று அசைவ உணவில்கோழிக்கறி முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.
அசைவ உணவுத் தேவையில் 50 சதவிகிதத்துக்கு மேல் கறிக்கோழி பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தேவை அதிகரிப்பால்கறிக்கோழி வளர்ப்பில் அதிகமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
 மாநிலத்தில் முன்பு நாமக்கல்கரூர் மாவட்டங்களில் மட்டுமே இருந்த கறிக்கோழி வளர்ப்புத் தொழில்,இப்போது மாநிலம் முழுவதும் பரவி சிறந்த தொழிலாக உருவாகி வருகிறது.
 இருப்பினும் நாமக்கல்கரூர் பகுதிகளில் இருந்தே கறிக்கோழிக் குஞ்சுகள் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. இக் கோழிக்குஞ்சுகளை வளர்த்து பண்ணையாளர்கள்,குஞ்சுகளைக் கொடுத்த நிறுவனத்திடமே வழங்குகின்றனர்.
இதில் அந்த நிறுவனங்கள் கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதற்குரிய தீவனங்களை வழங்குகிறது.
 கோழிகளைப் பராமரித்துவளர்ப்பது மட்டுமே பண்ணையாளர்களின் பொறுப்பாக உள்ளது. கோழியின் எடையைப் பொருத்து பண்ணையாளர்களுக்குப் பணம் வழங்கப்படுகிறது. இதனால்கோழிப் பண்ணையாளர்களுக்குதாங்கள் எந்த வகை தீவனத்தை கோழிகளுக்கு வழங்குகிறோம் என்பதே முழுமையாக தெரியாமல் உள்ளது.
 தேவை அதிகரிப்பால் சில கறிக்கோழி வளர்ப்பாளர்கள்பல குறுக்கு வழிகளை அண்மைகாலமாக கையாண்டு வருகின்றனர். முட்டையில் இருந்து கோழிக்குஞ்சு வெளியே வந்து 65 நாள்களில்தான்அது உணவுக்குப் பயன்படுத்துவதற்குரிய வளர்ச்சியைப் பெறுவதால் கறிக் கோழிகள், "சிக்கன் 65' என சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அழைக்கப்பட்டு வந்தது.
 இந்த கோழிக்கறியை அதிகம் சாப்பிடும் பெண் குழந்தைகள் விரைவில் பூப்படைகிறார்கள். கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இந்த உணவு சுகாதாரமானதல்ல என சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புகார் கூறப்பட்டது. ஆனால்கறிக்கோழி வளர்ப்பை வரைமுறைப்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
 இதன் விளைவாக சிலர்கறிக்கோழி வளர்ப்பில் மேலும் பல்வேறு கொடிய நோய்களை உருவாக்கும் குறுக்குவழியை கையாளத் தொடங்கி உள்ளனர்.
 கோழிகள் வேகமான வளர்ச்சியை எட்டுவதற்குதீவனங்களில் வேதிப் பொருள்களை கலந்து கொடுத்து வருவதாக இப்போது புகார் எழுந்துள்ளது.
இதில் கோழியின் வளர்ச்சியை வேகப்படுத்தும் ஹார்மோன்களை விரைந்து சுரக்கும் வகையில் வேதிப்பொருள்கள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கோழிகள் சாதாரணமாக 120நாள்களில் பெற வேண்டிய வளர்ச்சியை, 35 நாள்களில் இருந்து 40 நாள்களில் பெறுகின்றன.
இதன் காரணமாக இந்த தீவனப் பொருள்கள் கறிக்கோழி வளர்ப்பாளர்கள்ஹோட்டல் தொழிலாளர்கள் மத்தியில் "சிக்கன் 35' என்றே அழைக்கப்படுகிறது. தீவனம்பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் செலவைக் குறைத்து லாபத்தை அதிகரிப்பதால் கறிக்கோழி வளர்ப்பாளர்கள்இந்த குறுக்குவழியை கையாளுகின்றனர்.
 கோழிகள் விரைவிலேயே வளர்ந்து விடுவதால் கறிக்கோழி வளர்ப்பாளர்கள் பயன் அடைந்தாலும்,அதைத் தொடர்ச்சியாக சாப்பிடுகிறவர்களுக்கு நோய் வருவது உறுதி என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
 புற்றுநோய்ரத்தசோகைஆண்மைக் குறைவுபெண்களுக்கு மலட்டுத் தன்மை என இதைச் சாப்பிடுவதால் வரும் நோய்களைப் பட்டியலிடுகின்றனர் மருத்துவர்கள்.
 இவ்வளவு பெரிய நோய்கள்அந்த கோழிக்கறிகளில் இருந்து பரவுவது தெரிந்தும்அரசு மௌனம் சாதிப்பதுதான் புரியாத புதிராக உள்ளது. இதுவரை அரசு அதிகாரிகள் இந்த வகை கறிகளை எந்தக் கடைகளிலோ அல்லது ஹோட்டல்களிலோ பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
 இனியாவது மக்களின் நலன் கருதி கறிக்கோழி வளர்ப்பை முறைப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More