உன்னுடன் பழகியது குற்றமா
உன்னில் காதல் கொண்டது குற்றமா
உரைத்திடு உண்மையை
உன்னை விட்டு செல்லுகின்றேன்...
உறவுகளை வெறுத்தேன்
உன்னத நட்புக்களை இழந்தேன்
உடையுடன் நடையை மாற்றினேன்
உனக்காக எல்லாம் உனக்காக....
என்நிலை தெரிந்தும்
என்னை வார்த்தையாலே
எள்ளி நகையாடுகின்றாய்
வலிக்க வலிக்க...!
எட்டாப்பழம் புளிக்குமென்று தெரிந்தும்
என்னை ஏன் காதலித்தாய்?
எதுவரினும் எதிர்த்திடுவேன்
என்றும் உன்னை நான் மறவேன்
என்றென்றும் நீ வேண்டுமென்றாய்
என் உயிரே நீ என்றாய்
எல்லாமே வார்த்தைஜாலமா?
நான் உனக்காக எதையிழக்க
உனையிழக்க நான் தயாரில்லை
எனையிழக்க நீ தாயரெனில்
உன் முடிக்கு தடைபோட
நான் யார் உனக்கு?...





0 comments:
Post a Comment