Tuesday, August 16, 2011

உன் அன்னைக்கு நன்றி






அன்னையே என் ஒவ்வோர் அங்கத்தையும்
பரிசாய் தந்தவளே
உன் வியர்வை என் நெஞ்சில்
உதிரமாய் ஓடுதடி

அருளுக்கு அம்பிகையாம்
எனக்கு எல்லாவற்றிக்கும்
நீயே அருளாம்பிகையாம் 
சோகம் கவலை என்னை துரத்த
பொதி சுமந்த தெய்வமாய்

சுமை தாங்கிய தெய்வம் நீயடி
கருவுற்ற நாளில் இருந்து
எமக்காய் வாழ்ந்து
பெண்ணியம் காத்தவள் நீ

என் ஒற்றை அன்பில் பற்றுண்டு
ஒத்தையாய் எங்கும் உன் அன்புக்கும்
என்றும் அடிமை நான்
உன்னை பெற்ற
உன் அன்னைக்கு நன்றி...

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More