Tuesday, July 26, 2011


தலைப்பில் கிளிக் செய்யவும்
1.திருப்பித் தரும் வானம் என்று, வானத்திற்கு ஒரு அற்புதமான அடைமொழியை அல்லாஹ் பயன்படுத்துகிறான்
2. இவ்வசனத்தில் (24:43) 'வானில் மழை நீர் எவ்வாறு சேமிக்கப்பட்டுபூமியில் பொழியப்படுகின்றதுஎன்ற அறிவியல் உண்மை விளக்கப்படுகிறது.
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/419/
3. நிலத்தடி நீர் எங்கிருந்து வருகின்றது?
4. பயிர் விளைச்சலில் நீர் பாய்ச்சி விளைபவற்றில் 5 விழுக்காடும், ானாக விளைபவற்றில் 10விழுக்காடும் ஜகாத் கொடுக்க வேண்டும். இது நாம் செய்த செலவு போக கிடைக்கும் இலாபத்திலா? அல்லது மொத்த விளைச்சலிலா?
இவைகள் உங்களுக்கு பயன் தரலாம்.


பிறந்தது மழைக்காலம்

மழைக்காலம் பிறந்தாலேகொசுவுக்குக் கொண்டாட்டம் தான். மனிதர்களின் ரத்த வேட்டையைத் துவங்கி விடும்.
கொசுக்களில் பல வகை உண்டுபகல் நேரங்களில் கடிப்பவைஇரவு நேரங்களில் கடிப்பவை என! எவ்வகை கொசுவாயினும்அவற்றில் பெண் கொசுக்கள் முட்டையிடரத்தம் தேவை. தொடர்ந்து ஒவ்வொரு மனிதராக அது கடிக்கும் போதுரத்தத்தின் மூலம் பரவும் மலேரியாயானைக்கால் நோய் (பைலேரியா)மூளைக்காய்ச்சல் (என்செபாலிடிஸ்)டெங்கூசிக்குன்குனியா போன்ற நோய்கள் உருவாகின்றன.
மலேரியா தொற்றுக் கிருமிகளை ஏந்தி வரும் ஒரு கொசுநம்மைக் கடித்த 10 முதல் 14 நாட்களுக்குள்,மலேரியா உருவாகும். காய்ச்சல்தலைவலிஉடல் வலிபேதி ஆகியவை ஏற்படும். 
ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்ச்சல் ஏற்படும். குளிரும்திடீரென வியர்க்கும். உடலில்ரத்த சிவப்பணுக்கள் அளவு குறையும். இதனால்ரத்த சோகை உருவாகிசோர்வுசோம்பல் ஏற்படும். குழந்தைகளுக்கும்கர்ப்பிணிகளுக்கும் இந்நோய் வந்தால் ஆபத்து.
ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் மலேரியா காய்ச்சலை கண்டறியலாம். நோய் உறுதி செய்யப்பட்டால்முழு சிகிச்சை எடுக்க வேண்டியது மிக அவசியம். இந்த நோய்க்கு காரணமான ஒட்டுண்ணிகள்நம் கல்லீரலில் அமைதியாக வாழ்ந்தபடி இருக்கும். முழுமையான சிகிச்சை எடுக்காவிடில்மீண்டும் அதிதீவிரமாக தாக்கத் துவங்கி விடும். காய்ச்சல் குறைந்தவுடன்மருந்து மாத்திரை சாப்பிடுவதை பலரும் நிறுத்தி விடுவது துரதிருஷ்டவசமானது.
கடும் காய்ச்சல் ஏற்பட்டால்முறையான மருத்துவரிடம் காண்பிக்கும் பழக்கமும் மக்களிடையே இல்லை. முறையாக மருத்துவம் படிக்காத டாக்டர்கள்பல மாத்திரைகளைக் கலந்து ஒரு பேப்பர் பாக்கெட்டில் போட்டு கொடுத்து விடுகின்றனர். இவை ஆன்டிபயாடிக்ஜுர மத்திரைஒரு ஸ்டிராய்டுஒரு மலேரியா தடுப்பு மாத்திரை என இருக்கும்.
இது போன்றகுத்து மதிப்பான சிகிச்சைசில நேரங்களில் வெற்றி பெறலாம்பாக்டீரியாவுக்கு ஆன்டிபயாடிக்கும்மலேரியாவுக்கு அதற்கென மாத்திரையும் கொடுக்கப்படுவதால். ஆனால்இறுதியில் இந்த இரண்டு நோய்களுமேமீண்டும் திரும்பத் தாக்கத் துவங்கிவிடும். இதன் விளைவுஉடலிலுள்ள ஒட்டுண்ணிகள்மலேரியா நோய்க்கான மருந்தையே எதிர்க்கத் துவங்கி விடும். இது ஆபத்து.
பைலேரியக் கொசுக்கள் கடித்தால் ரத்தத்தில் பைலேரியா கிருமி பரவும். யானைக்கால் நோய் ஏற்படும். கடும் காய்ச்சல்குளிர் ஏற்படும். நிணநீர் சுரப்பிகளை இந்த கிருமி அடைத்துக் கொள்ளும். இதனால்கை,கால்கள் வீங்கும். ஆண்களுக்கு விரைப்பை வீக்கமும் ஏற்படும். வீங்கிய இடங்களிலுள்ள தோல் தடிமனாகி விடும். இந்த தோல்மீண்டும் கிருமிகளால் பாதிக்கப்படும்.
ரத்தத்தில் பைலேரியா புழுக்கள் உள்ளனவா என்பதைஇரவு நேரத்தில் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை வைத்துப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆரம்ப நிலை பாதிப்பைசரி செய்து விடலாம். அல்பெண்டிசால் மாத்திரைகள் இரண்டு வாரத்திற்கும்ஐவெர்மெக்டின் மாத்திரை ஒன்றும்டைஈத்தைல் கார்பாமேசைன் மருந்து 12 முதல் 14 நாட்கள் வரையும் சாப்பிட்டால்குணமாகும். நோய் தீவிரமடைந்தால்குணப்படுத்துவது கடினம்அறுவை சிகிச்சை மூலம் தான் வீக்கத்தை நீக்க முடியும்.
"
ஏடிஸ் ஈஜிப்டிகொசுக்களின் உடலில்புலிகள் போல வரி காணப்படும். பகல் நேரங்களில் மனிதர்களைக் கடிக்கும். இவற்றால்டெங்கூசிக்குன்குனியா நோய்கள் ஏற்படும். அதிக காய்ச்சல்உடல் முழுதும் தடிப்பு ஏற்படுதல்இணைப்புகளில் வலிமுதுகு வலிதசை வலி ஏற்படும்.
இந்த நோய்கள் இப்போது வேகமாகப் பரவும் தன்மை கொண்டவை. இந்நோயால் தாக்கப்பட்டவர்களில்,மருந்து உட்கொண்டுகாய்ச்சல் குறைந்தாலும்மூட்டுகள் வலிமுதுகு வலி ஆகியவை தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த நோய்களுக்கு மருந்துகளும் கிடையாது.
மூளைக்காய்ச்சலும்கொசுக்கள் மூலம் பரவுவதே. இதற்கும் சரியான மருந்து கிடையாது. ஆனால்,உயிரைப் பறிக்கும் ஆபத்துஇந்த நோயில் உள்ளது. ஜப்பான் பி வகை மூளைக்காய்ச்சல் ஏற்படாமலிருக்கதடுப்பு மருந்து உள்ளது.
இத்தகைய நோய்கள் வந்த பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்வதை விடவராமல் காப்பதே நல்லது.
பாத்திரங்களில் நீரைத் தேக்கி வைக்கக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள்தொங்கிக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் ஷீட்களை அவ்வப்போது நிமிர்த்திக் கட்ட வேண்டும்.
* "
ஏசிமற்றும் கூலர்களிலுள்ள டிரேக்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அவற்றில் உப்பு தூவி வைத்தால்கொசுக்கள் அண்டாது.
பூந்தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
திறந்த கிணறுகள்தொட்டிகளில் கொசுக்கள் புகா வண்ணம் வலை அடிக்க வேண்டும்.
அலங்கார மீன்களானகபூசியாபோசிலி (கப்பி வகைகள்) ஆகியவைகொசு முட்டைகளை உணவாக உட்கொள்ளும் பழக்கம் கொண்டவை. நகராட்சி அலுவலகங்கள்மலேரியா கட்டுப்பாட்டுத் திட்ட அலுவலர்கள் மற்றும் சில கடைகளில் இந்த மீன்கள் கிடைக்கும். இவற்றை பொதுக் கிணறுகள்நீர் நிலைகளில் வளர்த்தால்கொசு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
வீட்டு ஜன்னல்கள்கதவுகளில்கொசு வலை அடித்து வைக்கலாம்.
இரவு நேரங்களில் அறையில் கொசு வலை கட்டித் தூங்கினால்கொசுக் கடியிலிருந்து தப்பிக்கலாம்.
முழுக்கை சட்டைகால் மறையும் வகையில் பேன்ட் ஆகியவை அணிந்து படுத்தால் கொசு கடிக்காது.
கொசு கடியிலிருந்து தப்பிக்கஉடலில் பூசும் வகையிலான களிம்புகள் உள்ளன. ஆனால்அவற்றை நேரடியாக உடலில் பூசுவதை விடஆடைகளில் பூசிக் கொள்வது நல்லது. குழந்தைகள்கர்ப்பிணிகள் இந்தக் களிம்புகளைப் பயன்படுத்தக் கூடாது.
கொசு வத்திகள்சுருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இவைமூச்சுக் குழலில் ஒவ்வாமை ஏற்படுத்தும். ஆஸ்துமாஅடுக்குத் தும்மல் ஆகியவற்றை உருவாக்கி விடும்.
பூச்சிக்கொல்லி மருந்துக் கெல்லாம் இப்போதைய கொசுக்கள் கட்டுப்படுவதில்லை. இந்தப் பூச்சிக் கொல்லிகளை, "ஸ்பிரேசெய்தால்இந்த மருந்தை எதிர்க்கும் சக்தியைக் கொசுக்கள் பெற்று விடும்;மனிதர்களுக்குமூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படும்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More