Monday, August 15, 2011

இரண்டு தலை பாம்பு / ஆண்களை விட பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது எதனால்


கேள்வி ? சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறும் முறைக்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளதாமுந்தைய காலத்தில் தாய் அல்லாத மற்ற பெண்குழந்தைக்குப் பால் கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. பால் கொடுப்பதன் மூலம் அந்தப் பெண் தாய் அந்தஸ்தை அடைந்தாலும்,தந்தைக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த உறவும் ஏற்படுவதில்லை. பால்குடி முறையும்சோதனைக் குழாய் முறையும் ஒன்று போல் தோன்றுகின்றதே! விளக்கவும்.         நிஸார் அஹ்மத் மங்கலம் பேட்டை

ஆண்களை விட பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது எதனால்;
ஆண்களை விட பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுகிறதுஇதனால் அவர்கள் கழுத்து வலியாலும் முதுகு வலியாலும் அவஸ்தை படுகிறார்கள் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த இரண்டு வலிகளும் பெரும்பாலான பெண்களை பாதிக்கிறது என்பது தெரிந்த விஷயம். மன அழுத்தமே அதற்கு காரணம் என்பது புது தகவல். மன அழுத்தம் என்பது மனிதர்கள் மிக அதிகமாக பயன்படுத்தும் டாப் 20 வார்த்தைகளில் ஒன்று. ஆங்கிலத்தில் ஸ்டிரெஸ். ஒரு சூழ்நிலையை சுலபமாக எதிர்கொள்ள முடியாதபோது மன அழுத்தம் உண்டாகிறது. இது பாசிடிவ் காரணங்களாலும் உருவாகலாம் என்கின்றனர். ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சிந்திப்பதுமூடு மாறிக் கொண்டே இருப்பதுசின்ன விஷயத்துக்கு எரிந்து விழுவதுதனிமையாக உணர்வது போன்றவை இதன் உள ரீதியான வெளிப்பாடுகள். உடல் ரீதியாக என்ன நிகழ்கிறது என்ற பட்டியல் தலைசுற்ற வைக்கும்.

முதுகு வலிகழுத்து வலிமூட்டு வலிவயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல்,  கிறுகிறுப்புநெஞ்சில் அடைப்பது போன்ற உணர்வுவேகமான இதய துடிப்புஅகோர பசி அல்லது பசியின்மைதூக்கமின்மைவயிற்றுப்புண் அவ்வளவு ஏன்,  நீரிழிவு கூட வருகிறதாம். ஒரு வழியாக ஸ்டிரெஸ் விலகும்போது மற்றதெல்லாம் ஒழிந்தாலும் முதலில் சொன்ன இரு கண்டிஷன்களும் தீராத நோயாக தொடரும் என்பதை சோதனைகள் மூலம் கண்டு பிடித்துள்ளனர். வேலைக்கு செல்லும் பெண்களும் கல்லூரி மாணவிகளும் இந்த வகையில் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று அந்த நான்காண்டு சோதனையில் தெரிய வந்துள்ளது. அலுவலகத்தில் ஆண்களை போல பணியாற்றிவிட்டு,  வீடு திரும்பியதும் இன்னொரு ஷிப்ட் வேலையும் செய்ய நேர்வதால் ஸ்டிரெஸ் பாதிப்பை அவர்களால் தவிர்க்க முடியாமல் போகிறது. ஆண்கள் மட்டுமே வேலைக்கு செல்லும் நாடுகளில் பெண்களுக்கு இந்த பிரச்னை இல்லை.
அழுத்தம் வராத அளவுக்கு இரு பொறுப்புகளையும் சமாளிப்பது சிரமம். எனவே வீட்டு வேலை பாரத்தை குறைத்துக் கொள்வது வேலையாள் நியமிப்பதுகுடும்பத்தினருடன் பங்கிடுவது போன்ற வழிகளில் மட்டுமே இதற்கு தீர்வாக இருக்கும்போல் தோன்றுகிறது. ஆண்கள் கை கொடுக்க வேண்டிய நேரம்.





லட்சியத்தை அடைந்த பின்னரேவாழ்க்கையில் சந்தோஷம்

ஐம்பது வயதைக் கடந்த பின்னரேதங்களது வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எந்த வயதில் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது என்பது குறித்துபிரிட்டனில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 50 வயதைக் கடந்த 1,500 ஆண்பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில்,பெரும்பாலானோர், 50 வயதைக் கடந்த பின்னரே சந்தோஷத்தை உணருவதாக தெரிவித்தனர். கல்வியை முடித்ததும்தொழில் தொடங்குவதுவேலையில் சேருவது என்று ஆண்களும்,பெண்களும் தங்கள் எதிர்காலத்தை நோக்கி ஓடத் தொடங்குகின்றனர். இடையில் திருமணம்,குழந்தைகள்பின்குழந்தைகளின் கல்விவேலை என்று அவர்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. இதனால்குடும்பத்தினர்நண்பர்களுடன் நேரம் செலவிடவோசமூகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கு பெறவோ முடியாத நிலை ஏற்படுகிறது.

தங்களது பிள்ளைகள் சொந்தக் காலில் நிற்கத் தொடங்கும் போதும்தங்களது வாழ்க்கையில் சந்தோஷத்தை உணரத் தொடங்குவதாக பெரும்பாலானோர் கூறுகின்றனர். அதன் பின்னரேதங்கள் குடும்பத்தினருடனும்நண்பர்களுடனும் நேரத்தை செலவிட முடிவதாகவும்தங்களுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபட முடிவதாகவும் கூறுகின்றனர். மேலும்இந்த ஆய்வில் பங்கேற்ற பத்தில் நான்கு பேர்தாங்கள் எல்லா வயதிலும் சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு பேர்தங்கள் லட்சியத்தை அடைந்த பின்னரேவாழ்க்கையில் சந்தோஷம் தொடங்கியதாக கூறுகின்றனர்.



இரண்டு தலை பாம்பு 
தெற்கு உக்ரைன் ஒருமிருகக்காட்சிசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.கருங்கடலின் யால்ட்டா என்ற கிரிமிய நகரத்தில் "Skazka" (விசித்திர)பூங்காவில் அல்பினோ கலிபோர்னியா
Kingsnake என்று இரண்டுதலைகள் ொண்ட பாம்பு புதனன்று காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளதாக கூறினார்,     ஒரு தலை மந்தமாக செயல்படுகின்றது. என்றாலும்தனியாக சாப்பிடுகிறது.

Dmytro Tkachov, 
பாம்புவை  பார்த்துக்கொள்ளும் உயிரியல் பூங்காதொழிலாளிஒன்று சாப்பிட்டால் மற்றொன்று சாப்பிட போவதற்கு முன்,  பாம்பு உண்ணும் போது எப்பொழுதும் அதன்தலையில் 
இடையே மற்றொரு தலை  தடையாக இருக்கிறது என்று தெரிவித்தார்.பாம்பு செப்டம்பர் மத்தியில்வரை  மிருகக்காட்சிசாலையில் காட்சிக்கு இருக்கும்.பூங்காவில் மேற்கொண்டு விவரங்கள் எதனையும் வழங்கவில்லை . (கூகுல் டிராஸ்லேட்டின் உதவியால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது)
பாம்பை நீங்கள் பார்க்கவேண்டும் என்றால் அட்டாச் மெண்டில் இனைக்கப் பட்டுள்ளது 
டவுன் லோட் செய்து பார்க்கவும்.  http://youtu.be/FGHzI2apBBM

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More