தமிழ் சினிமா, தமிழ் தொடர்
சூது, வாது இல்லாத பாத்திரங்களே இல்லை. பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம்.
உன் புருஷன் உன்னை ஏமாற்றி மற்றவனுடன் வாழ்ந்தால், விடாதே... நீயும், உன் புருஷனை ஏமாற்றி, மற்றவளின் புருஷனுடன் வாழ்ந்து காட்டி, உன் புருஷனுக்கு புத்தி புகட்டு.
ஓரகத்தியுடன் சண்டையா...உடனே உன் தங்கையை, உன் மச்சினனை மயக்கச் செய்து, அவனை வயப்படுத்தி, ஓரகத்தியை பழிவாங்கு. அவன் சாம்ராஜ்யம் அழியணும்; நான் முன்னுக்கு வரவேண்டும். சாகும் தருவாயில், மகளிடம் அப்பன் கேட்கும் உதவி...
என் குடும்பத்தை நாசமாக்கிட்டான் அவன். நயவஞ்சகத்தால், கூட இருந்து குழி பறித்து, அவன் குடும்பத்தில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையிலும்; பெற்றவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையிலும்; உடன்பிறப்புகளுக்கு இடையிலும் பிரிவு ஏற்படுத்தி, ஒருவருக்கு ஒருவர் பகைவராக்கி, அந்த குடும்பத்தை நாசம் செய்ய வேண்டும். இதுவே என் கடைசி ஆசை; அப்போது தான், என் ஆத்மா சாந்தி அடையும்...'
நீ தான் மணமேடையில், சண்டை செய்து, உன்னை மணக்க இருந்தவளின் திருமணத்தை நிறுத்தி விட்டாயே! அதன் பின், மற்றொருவளுக்குத் தாலி கட்டி, மணம் செய்து குடும்பம் நடத்துகிறாயே! நீ கைவிட்ட பெண்ணை நான் மணம் செய்து கொள்ள, நீ யார் என்னை எதிர்ப்பது?' இதற்கு ஒன் லைன் பதில்: "என்ன பெரிய தாலி? இப்ப கூட நான் கட்டிய தாலியை அறுத்து எறிந்து விட்டு, முன்னவளை கட்டிக்குவேன். நீ இதுல குறுக்கிடாதே!'
அரசியல்வாதிகளுக்கும், தாதாக் களுக்கும், போலீசுக்கும் உள்ள ஒட்டுறவு.
இவர்கள் நாட்டின் நடப்பைச் சொல்கின்றனரா? இல்லை, மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கின்றனரா?
அம்மம்மா... எங்கு சென்று ஒளிந்தது நம் நாட்டுக் கலாச்சாரம்? நம் கலாசாரத்தின் உயர்வு என்ன? நமக்கு அவை புகட்டிய அறிவுரைகள் என்ன? நாம் எங்கு செல்கிறோம்?
உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், அகிம்சை, நட்பு, மரியாதை, இன் சொல், வன்சொல் களைதல், ஒழுக்கம், பணிவு, அடக் கம் எல்லாம் எங்கு சென்றன? மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகியதால், "டிவி'யில் தமிழ் சினிமா, தமிழ் தொடர்களைப் பார்ப்பதை நிறுத்தி விட்டோம். என் மன எண்ணங்களை கொட்டித் தீர்த்து விட்டேன்!
என்றும், இன்னும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் எழுதலாம். ஏதாவது ஒரு தனியார், "டிவி'யாவது, நம் பண்பாடுகளை நிலைநிறுத்தும் விதமாக, ஒரே ஒரு தொடராவது சோதனை முயற்சியாக எடுத்து ஒளிபரப்புமா?
ஓரகத்தியுடன் சண்டையா...உடனே உன் தங்கையை, உன் மச்சினனை மயக்கச் செய்து, அவனை வயப்படுத்தி, ஓரகத்தியை பழிவாங்கு. அவன் சாம்ராஜ்யம் அழியணும்; நான் முன்னுக்கு வரவேண்டும். சாகும் தருவாயில், மகளிடம் அப்பன் கேட்கும் உதவி...
என் குடும்பத்தை நாசமாக்கிட்டான் அவன். நயவஞ்சகத்தால், கூட இருந்து குழி பறித்து, அவன் குடும்பத்தில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையிலும்; பெற்றவர்களுக்கும்,
நீ தான் மணமேடையில், சண்டை செய்து, உன்னை மணக்க இருந்தவளின் திருமணத்தை நிறுத்தி விட்டாயே! அதன் பின், மற்றொருவளுக்குத் தாலி கட்டி, மணம் செய்து குடும்பம் நடத்துகிறாயே! நீ கைவிட்ட பெண்ணை நான் மணம் செய்து கொள்ள, நீ யார் என்னை எதிர்ப்பது?' இதற்கு ஒன் லைன் பதில்: "என்ன பெரிய தாலி? இப்ப கூட நான் கட்டிய தாலியை அறுத்து எறிந்து விட்டு, முன்னவளை கட்டிக்குவேன். நீ இதுல குறுக்கிடாதே!'
அரசியல்வாதிகளுக்கும், தாதாக்
இவர்கள் நாட்டின் நடப்பைச் சொல்கின்றனரா? இல்லை, மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கின்றனரா?
அம்மம்மா... எங்கு சென்று ஒளிந்தது நம் நாட்டுக் கலாச்சாரம்? நம் கலாசாரத்தின் உயர்வு என்ன? நமக்கு அவை புகட்டிய அறிவுரைகள் என்ன? நாம் எங்கு செல்கிறோம்?
உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம்,
என்றும், இன்னும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் எழுதலாம். ஏதாவது ஒரு தனியார், "டிவி'யாவது, நம் பண்பாடுகளை நிலைநிறுத்தும் விதமாக, ஒரே ஒரு தொடராவது சோதனை முயற்சியாக எடுத்து ஒளிபரப்புமா?
கலைஞர் தொலைகாட்சி, ராஜ் டிவி, மற்றும் s.sமியூசிக் ஆகிய சேனல்களில்
இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி.
பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?'என்பதுதான் அது.
...இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் பதினாறு வயதினிலே படத்தில் இணைந்து நடித்த நடிகர்கள் என்ற க்ளூவை வேறு தருகிறார்.
உடனே, யாரோ ஒருவருக்கு லைன் (!) கிடைத்துவிட, அவர் 'கவுண்டமணியு ம் செந்திலும்' என பதில் சொல்கிறார்.ரஜினியையும், கமலையு ம் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும் போலவா இருக்கிறார்கள்? என்ன கூத்து இது?
தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது. பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது? ஏன் இவர்கள் இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்? உண்மையிலேயே கொடுக்கிறார்களா? அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன.
இந்த நிகழ்ச்சிகளில். திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக் கூடியதாகவும், உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே அமைகின்றன. அதற்குக் காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான்.
திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும். ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம் உள்ள மக்கள்,குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:
1.இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள். பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன் நம்பர்,ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி.
2. ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் ) நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில் சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம்.
3.கால் வெயிட்டிங்கிற்குப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும் பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.
4.நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.
5.இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்திடம் இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள்.
இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை.
இதைப் படித்தபிறகாவது, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்.
பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?'என்பதுதான் அது.
...இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் பதினாறு வயதினிலே படத்தில் இணைந்து நடித்த நடிகர்கள் என்ற க்ளூவை வேறு தருகிறார்.
உடனே, யாரோ ஒருவருக்கு லைன் (!) கிடைத்துவிட, அவர் 'கவுண்டமணியு
தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது. பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது? ஏன் இவர்கள் இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்? உண்மையிலேயே கொடுக்கிறார்களா? அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன.
இந்த நிகழ்ச்சிகளில். திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக் கூடியதாகவும், உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே அமைகின்றன. அதற்குக் காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான்.
திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும். ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம் உள்ள மக்கள்,குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:
1.இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள். பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன் நம்பர்,ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி.
2. ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் ) நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில் சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம்.
3.கால் வெயிட்டிங்கிற்குப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும் பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.
4.நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.
5.இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்திடம் இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள்.
இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை.
இதைப் படித்தபிறகாவது, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்.





0 comments:
Post a Comment