சமீபகாலமாக டி.வி.சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதே சமயம் பெரியவர்கள் மட்டுமல்ல
குழந்தைகளும் டி.வி.மோகத்தின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள். பல
மணி நேரம் தொடர்ந்து டி.வி.பார்ப்பதால் உடல்நலம் கடுமையாக
பாதிக்கப்படும் என்கிறது சமீபத்தையகணக்கெடுப்பு ஒன்று. நாடு
முழுவதும் எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் மூலம் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன. 300 குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட
இந்த ஆய்வில் 20 சதவீதம் பேர் தற்போது தொப்பையுடன் உள்ளனர்.
இதுதவிர 10 சதவீத குழந்தைகளுக்கு தலைவலியும், 2 சதவீத குழந்தைகளுக்கு வலிப்பும் உள்ளது. 6 சதவீத குழந்தைகளுக்கு உடல்
பலவீன நோய்களும் பாதித்திருப்பது தெரியவந்தது. அதிக அளவில் டி.வி.பார்ப்பதால் 53 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மிகவும்
தாமதமாகவே தூங்கச் செல்கின்றனர். இதனால் அவர்கள் போதுமான ஓய்வு எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. டி.வி.பார்ப்பதால்
குழந்தைகளின் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுவதாகவும், அவர்கள் அதிகஅளவில் கோபம், எரிச்சல், அடைவதாகவும், 32 சதவீத குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
டி.வி.பார்க்கும் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதில்லை. இதனால் உடல் மற்றும் மன நலத்திற்கு
தேவையான அத்தியாவசிய பயிற்சிகள் அவர்களுக்கு கிடைக்காமல் போய் விடுகிறது. அதிக அளவில் டி.வி.பார்க்கும் குழந்தைகளில் 70 சதவீதம் பேருக்கு பேசும் மொழிகளில் தெளிவு இல்லாத நிலை
உள்ளது. தாங்கள் சொல்ல நினைப்பதை தெளிவாகச் சொல்ல முடியாமல் திணறுகின்றனர். ஆகவே , பெற்றோர்களே, நீங்கள் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துங்கள்.
என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது'
என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர். அல்குர்ஆன் 2-132
அவர்களின் டிவி பார்க்கும் நேரத்தை கண்காணியுங்கள். டிவியே பார்க்க வேண்டாம் என்று சொல்லவரவில்லை. அவர்களின் அறிவு
வளர்ச்சிக்கும், மன நலத்திற்கும் நன்மைகளை அள்ளித் தருகிற புத்தகங்களை படிக்க பழக்குங்கள். தினமும் குர்ஆன்,
செய்தித்தாள்களை வாங்கி படிக்கச் செய்யுங்கள். இதன் மூலம் அவர்களது மார்க்க மற்றும் பொது அறிவு வளர்வதுடன் நல்ல
சிந்தனையாளர்களாவும், பேச்சாளர்களாகவும் மாற வாய்ப்பிருக்கிறது.
என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி
மிக்க காரியமாகும். (அல்குர்ஆன் 31:17)
எனவே நம் குழந்தைகளை மார்க்க அறிவோடு சோ்த்து உலக அறிவையும் ஊட்டவேண்டும்.
மார்க்கம் அல்லாத உலக கல்வி மட்டும் நம் குழந்தைகளில் எதிர்கால வாழ்விற்கு நன்மை பயற்காது என்பதை பெற்றோர்கள் உணரவேண்டும்.
தொகுப்பு
ஒருங்கினைந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்





0 comments:
Post a Comment