Tuesday, July 26, 2011

நபிகள் (ஸல்) அவர்கள் அலாஹ்வைப் பார்த்தார்களா?




அல்லாஹ்வை இந்த உலகத்தில் யாரும் பார்க்க முடியாது. அல்லாஹ்வை எந்த மனிதனோஅல்லாஹ்வின் தூதர்களோபார்த்ததில்லைபார்க்கவும் முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. மறுமையில் தான்இறைவனைக் காணும் பாக்கியம் நல்லோருக்கு மட்டும் கிட்டும். அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் 6:103)

முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை பார்த்தார்கள் என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்து விட்டான். எனினும்அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை அவர்களுடைய அசல் உருவிலும்அமைப்பிலும் வான விளிம்பு முழுவதையும்அடைத்தபடி கண்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 3234

மஸ்ரூக் பின் அஜ்தஉ அறிக்கின்றார் :
முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைக் கண்டார்கள் என்று உங்களிடம் யார் அறிவிக்கின்றாரோ அவர் 
பொய்சொல்லி விட்டார். இறைவனோ "கண்கள் அவனைப் பார்க்காதுஎன்று கூறுகின்றான் (அல்குர்ஆன் 6:103). 
மேலும்,முஹம்மத் (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்று யார் உங்களிடம் அறிவிக்கின்றாரோ அவரும் பொய்சொல்லி விட்டார். இறைவனோ, "அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறிய மாட்டார்என்றுகூறுகின்றான் (அல்குர்ஆன் 27:65) என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். (நூல்: புகாரி 7380)
புகாரியில் 4855வது ஹதீஸில் ஆயிஷா (ரலி) அவர்கள்வஹீயின் மூலமோதிரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒருதூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும்அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்ஞானமிக்கவன் என்ற திருக்குர்ஆனின் 42:51 வசனத்தையும் தமதுகூற்றுக்குச் சான்றாகக் காட்டுகின்றார்கள்.
"நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, "அவனோஒளிமயமானவன்நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?'' எனக் கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம் 261)
திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டிருந்தும் ஆலிம்கள் பலர்நபி (ஸல்) அவர்கள்அல்லாஹ்வை மிஃராஜின் போது பார்த்ததாக கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்குஆதாரமாகக் கீழ்க்கண்ட வசனத்தை முன் வைக்கின்றனர்.

ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்.
(அல்குர்ஆன் 53:13) இந்த வசனத்தில் அவரைக் கண்டார் என்பது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கண்டதைப் பற்றித் தான் குறிக்கின்றதுஎன்பது இவர்களது வாதம். இந்த வசனத்திற்கு நபி (ஸல்) அவர்கள்தாம் கண்டது ஜிப்ரீல் (அலை) அவர்களைத் தான் என்றுவிளக்கமளித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கண்டதில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய போது, 53:13 வசனத்தைஆதாரமாகக் காட்டிஅவரை மற்றொரு முறையும் கண்டார் என்று திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதே என்று இந்தஹதீஸை அறிவிக்கும் மஸ்ரூக் கேட்கும் போது ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள்.

இந்தச் சமுதாயத்தில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான் தான்.அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அது ஜிப்ரீலைக் குறிக்கின்றது'' என்று பதிலளித்தார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கும்செய்தி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
எனவே நபி (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது இறைவனைக் கண்டார்கள் என்பது பொய் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் பார்க்க

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More